13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

 

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் 32 வயது பூக்கடைக்காரர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் பூக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரோடு வள்ளுவர் வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற பூக்கடைக்காரர் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரது பூக்கடைக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும்,

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்த நிலையில், பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் பூக்கடைக்காரர் அப்துல் ரகுமான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் ஆகி குழந்தை இருக்கும் அப்துல் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?
படம்
தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? - அரசியல் ஆய்வாளர்கள் .
படம்
அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?
படம்