கடலூர் மாவட்ட பத்திர பதிவுத்துறை அதிகாரியாக இருந்து வரும் கணேசன் பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற காரணத்தைக் காட்டி அலைக்கழிப்பது தான் அவருடைய முக்கிய வேலை. மேலும்,
அவர் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் பொதுமக்கள் கொடுத்தும் கூட ஏன் அலைக்கழிக்க வேண்டும் இதுதான் முக்கிய கேள்வி?
இங்கு இவருக்கு வரவேண்டிய வசூல் பணம் வந்தால்தான்! சான் அங்க பத்திரப்பதிவு நடக்கும் இதயற்றி பொதுமக்கள்! அப்பகுதியில் உயர் அதிகாரிகளுக்கும்,
மாவட்ட ஆட்சியருக்கும், தொடர்ந்து புகார் மனு அளித்தாலும், அவர் ஆளுங்கட்சியின் சப்போர்ட் இல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
.இதுபற்றி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணி புரியும் மற்ற அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். இவரைப் போன்ற பல பத்திரபதிவு அதிகாரிகள் மாவட்டந்தோறும் புரோக்கர்களை வைத்து ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அதிகம். மேலும், அரசு என்னதான் ஆன்லைன் மூலம் பதிவு ஏற்படுத்தினாலும், சட்டத்தை மதிக்காமல் உள்ளடி வேலை செய்து வருமானத்தை சம்பாதிக்கும் அதிகாரிகள் எல்லா மாவட்டங்களிலும் இருந்துவருகின்றனர்.
இதற்கு காரணம் மக்களின் முக்கிய பிரச்சனை!முக்கிய தேவை! பத்திரப்பதிவு. அந்த பத்திர பதிவு! காலம் கடத்தாமல் ,உடனே நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய தேவை!
அதனால் காலத்தை வீணடிக்காமல் தன்னுடைய வேலைகள் கெட்டுவிடுமே! என்ற காரணத்தினால், மக்கள் கொடுப்பதை கொடுத்து தங்கள் வேலையை முடித்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக த தினம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலர்களும் குறைந்தபட்சம் 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கமிசன் பார்க்கும் அதிகாரிகளும் உண்டு.
அது ஒவ்வொரு இடத்திற்கு, இடம் வேறுபடும். விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு ந நடத்துவது ஒரு கண் துடைப்புக்கா? என்கின்றனர் பொதுமக்கள். மேலும், மக்கள் இப்பிரச்சனை குறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை இல்லை .என்றால்! இதற்கு தீர்வு நீதிமன்றம்தான் என்று இப்பகுதி மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எனவே, அதிகாரிகளின் நடவடிக்கையை பத்திரிக்கை வாயிலாக தெரிவித்துவிட்டனர்.
இனி அவர்கள் நீதிமன்றத்துக்கு போவது தவிர வேறு வழியில்லை . என்று முடிவு செய்துவிட்டனர். நடவடிக்கை என்பது அதிகாரிகள் உண்மையை ஆய்வுசெய்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் ' என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை.